மராட்டிய பொது நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது

மராட்டியத்தில் பொறியியல், பார்மசி, சட்டம் உள்ளிட்ட படிப்புக்களுக்கான பொதுநுழைவு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் பொறியியல், பார்மசி, சட்டம் உள்ளிட்ட படிப்புக்களுக்கான பொதுநுழைவு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது.

பொதுநுழைவு தேர்வு அறிவிப்பு

மராட்டியத்தில் பொறியியல், பார்மசி, சட்டம், எம்.பி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆண்டு தோறும் பொது நுழைவுத் தேர்வு (எம்.எச்.டி.-சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு பொறியியல் (இயற்பியல், வேதியியல், கணிதம்) படிப்புக்கான பொது நுழைவு தேர்வு ஆகஸ்ட் 5 முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

இதேபோல பார்மசி படிப்புக்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12 முதல் 20-ந் தேதி வரையிலும், ஓட்டல் மேனஜ்மென்ட் படிப்புகளுக்கான தேர்வு ஆகஸ்ட் 21-ந் தேதியும், எம்.சி.ஏ. படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 4, 5-ந் தேதியும், எல்.எல்.பி. (3 ஆண்டு) படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 3, 4 -ந் தேதிகளிலும், 5 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கான தேர்வு ஆகஸ்ட் 2-ந் தேதி நடைபெற உள்ளது.

தாமதம் ஏன்?

இந்த தகவலை மாநில உயர், தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வுகள் குறித்து முழு விவரங்களை maahcet.org இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

12-ம் வகுப்பு மாணவர்கள் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மராட்டிய பொது நுழைத்தேர்வு தாமதமாக ஆகஸ்ட் மாதம் நடத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com