சிங்கப்பெருமாள் கோவில் அருகே புகையிலை கடத்திய வாலிபர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே புகையிலை கடத்திய வாலிபரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே புகையிலை கடத்திய வாலிபர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே மறைமலைநகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிங்கபெருமாள் கோவில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார்.

இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்ந துணி பைகளை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அந்த நபரை மறைமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்த நபர் செங்குன்றம் நரசிங்கபுரம் காலனி பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹீம் (வயது 34), என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முகமது இப்ராஹீம் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் முகமது இப்ராஹீமை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com