

சென்னை,
சென்னை நெற்குன்றம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் வீரவேல். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, வீரவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.