தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்த மனைவியை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது

தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்த மனைவியை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தனக்கு தெரியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்த மனைவியை குத்தி கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
Published on

அம்பர்நாத்,

தானே மாவட்டம் கல்யாண் தக்கர் பாடா பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் குருநாத் (வயது52). இவரது மனைவி மனிஷா (45). இவர்களுக்கு 24 வயதில் மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே சிறு, சிறு பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே ஆட்டோ டிரைவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து சென்றார்.

இந்தநிலையில் சமீபத்தில் ஆட்டோ டிரைவரின் மகளுக்கு திருமணம் நடந்து உள்ளது. ஆனால் திருமணத்துக்கு மனிஷா, கணவர் குருநாத்தை அழைக்கவில்லை. மேலும் அவரது பெயரை திருமண பத்திரிகையில் போடவில்லை.

இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மனைவி மனிஷாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் தடுக்க வந்த மகளையும் தாக்கிவிட்டு தப்பி சென் றார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குருநாத்தை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் கல்யாண், ஹாஜி மலாங் ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவர் குருநாத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com