கவுன்சிலர்கள் கூட்டம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.
கவுன்சிலர்கள் கூட்டம்
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு-செலவு குறித்த தீர்மானங்களை ஒன்றிய எழுத்தர் பழனிமுத்து வாசித்தார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com