

திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.
ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு-செலவு குறித்த தீர்மானங்களை ஒன்றிய எழுத்தர் பழனிமுத்து வாசித்தார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா நன்றி கூறினார்.