முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

தொடர் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
Published on

கூடலூர்:

தமிழக -கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 129.50 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் 130 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 349 கனஅடி. அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):- முல்லைப்பெரியாறு- 31.3, தேக்கடி-19.6, கூடலூர்-18.6, போடி-12.4.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com