கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை; சகோதரர் கைது

பெலகாவியில் குடிபோதையில் தாயை தாக்கியதால் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை; சகோதரர் கைது
Published on

பெங்களூரு: பெலகாவியில் குடிபோதையில் தாயை தாக்கியதால் கழுத்தை அறுத்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் மீது தாக்குதல்

பெலகாவி மாவட்டம் மாலமாருதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீநகர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் பஸ்கிரி (வயது 31), கூலித் தொழிலாளி. இவரது சகோதரர் மகேஷ் பஸ்கிரி (28). பிரகாஷ் தனது தாய், சகோதரருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் மதுஅருந்திவிட்டு குடிபோதையில் தாய் மற்றும் சகோதருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனால் குடிப்பழக்கத்தை கைவிடும்படி பிரகாசிடம், அவரது தாயும், மகேசும் கூறி வந்துள்ளனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு மதுஅருந்திவிட்டு குடிபோதையில் பிரகாஷ் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது தாயுடன் அவர் சண்டை போட்டதாக தெரிகிறது. அப்போது தனது தாயை பிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரகாசுக்கும், அவரது சகோதரர் மகேசுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

கழுத்தை அறுத்து கொலை

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மகேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரகாசை குத்தியதுடன், அவரது கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாலமாருதி போலீசார் விரைந்து வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது குடிபோதையில் தனது தாயுடன் தகராறு செய்ததுடன், அவரை தாக்கியதால் பிரகாசை, அவரது சகோதரர் மகேஷ் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாலமாருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com