பழனியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலைவீச்சு

பழனியில் ரவுடியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பழனியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலைவீச்சு
Published on

பழனி,

பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் துர்க்கைராஜ் (வயது 36). ரவுடியான இவர் கடந்த 2014-ம் ஆண்டில் நடந்த 2 கொலை வழக்கில் தொடர்புடையவர். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் ஒரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் துர்க்கைராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துர்க்கைராஜை அரிவாளால் வெட்டியது, மதுரையை சேர்ந்த சதீஷ்குமார் (45), பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன் (26), அடிவாரம் தெற்கு அண்ணாநகரை சேர்ந்த மாதவன் (28) என்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com