மின்வாரிய ஊழியர் மர்ம சாவு

கூடலூரில் மின்வாரிய ஊழியர் ஒருவர் மர்மான முறையில் இறந்தார்.
மின்வாரிய ஊழியர் மர்ம சாவு
Published on

தேனி:

தேனி மாவட்டம் கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் சின்னகருப்பன் (வயது 47). இவர் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு விஜயா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த சின்னகருப்பனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சின்னகருப்பனை சிகிச்சைக்காக மனைவி மற்றும் 3-வது மகன் சேர்ந்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னகருப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவருடைய உடல் சொந்த ஊரான தேவதானப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலை புதைப்பதற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.

அப்போது அவருடைய கழுத்தில் காயம் இருந்தது. இதையடுத்து அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு போனில் உறவினர்கள் புகார் கூறினர்.

அதன்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் அங்கு விரைந்து வந்து சின்னகருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com