நத்தம் அருகே விவசாயி அடித்துக் கொலை பெண் உள்பட 5 பேர் கைது

நத்தம் அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே விவசாயி அடித்துக் கொலை பெண் உள்பட 5 பேர் கைது
Published on

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோமணாம்பட்டியை சேர்ந்தவர் சின்னழகு (வயது 42). விவசாயி. அவருடைய மகள் சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரமேசுக்கும் திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சங்கீதா பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதுதொடர்பாக சின்னழகு குடும்பத்தினருக்கும், முருகன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முருகன் வீட்டுக்கு சென்ற சின்னழகு தனது மகளை ஏன் வாழ வைக்கவில்லை என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் சின்னழகுவை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னழகு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னழகை அடித்துக் கொலை செய்ததாக முருகன் மற்றும் அவருடைய உறவினர்கள் போஸ் பழனிச்சாமி (72), ராஜ்குமார் (19), செல்வம் (37), பொன்னழகி (47) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com