ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.
ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
Published on

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கலைச்செல்வன் (வயது 35). இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினத்தில் வால்கனைசிங் கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஆலங்குளம் நோக்கி கலைச்செல்வன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மின்சார வாரிய அலுவலகம் அருகே வரும்போது மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்த ஆலங்குளம் நத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைபாண்டி மகன் ஆனந்த் (38) ஓட்டி வந்த பைக்கின் மீது எதிர்பாராத மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட கலைச்செல்வன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

லாரி சக்கரம்

அப்போது தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் கலைச்செல்வனின் மீது ஏறி இறங்கியது. இதில் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த் மற்றும் லாரி டிரைவர் கருவந்தாவை சேர்ந்த அருணாசலம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com