அறந்தாங்கி அருகே பரிதாபம்: ஆட்டுக்கறி சாப்பிட்ட தாய்-மகள் பலி

அறந்தாங்கி அருகே ஆட்டுக்கறி சாப்பிட்ட தாய்-மகள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
அறந்தாங்கி அருகே பரிதாபம்: ஆட்டுக்கறி சாப்பிட்ட தாய்-மகள் பலி
Published on

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தாமரைச்செல்வி (வயது 32). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் தர்ஷினி (12) அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஆவணத்தான்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது மகள் தர்ஷினியை பார்ப்பதற்காக சேகர், தாமரைச்செல்வி ஆகியோர் தர்ஷினியின் பாட்டி வீட்டிற்கு கடந்த 14-ந் தேதி வந்தனர். பின்னர் அவர்கள் 3 நாட்கள் தங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் குடும்பத்தோடு அசைவ உணவு (ஆட்டுக்கறி) சாப்பிட்டு உள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் தர்ஷினி மற்றும் தாமரைச்செல்வி ஆகியோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த, அவரது உறவினர்கள் தாமரைச்செல்வி, தர்ஷினி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் தர்ஷினி, தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com