அய்யலூர் அருகே, விபத்தில் பலியான மாணவியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

அய்யலூர் அருகே, விபத்தில் பலியான மாணவியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யலூர் அருகே, விபத்தில் பலியான மாணவியின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
Published on

வடமதுரை,

அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனூரை சேர்ந்தவர் உலகன். அவருடைய மகள் மாரியம்மாள் (வயது 13). இவள், அய்யலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தீத்தாகிழவனூரை அடுத்த பேசும் பழனியாண்டவர் கோவில் அருகே திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையை கடக்க முயன்றாள்.

அப்போது அந்த வழியாக வந்த கார், மாணவி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மாரியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தாள். இந்த விபத்து குறித்து, தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த கார் டிரைவர் குகன் என்பவர் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com