செந்துறை அருகே சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா

செந்துறை அருகே 12 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செந்துறை அருகே சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா
Published on

செந்துறை,

செந்துறை அருகே 12 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்தனர். இதில் செந்துறையை சேர்ந்த ஒருவர் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரை ஏற்கனவே மருத்துவ குழுவினர் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவரது மருந்து கடையில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தனர். அவர்களில் செந்துறையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

2 பேர் பாதிப்பு

அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராயம்புரம் கிராமத்தை சேர்ந்த பெண்ணின் எதிர்வீட்டில் வசித்த 12 வயது சிறுவனுக்கும், பக்கத்து தெருவில் உள்ள 36 வயது கூலித்தொழிலாளிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு குழுவினர் அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் அவர் களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களின் ரத்த மாதிரிகளையும் பரிசோதனைக்கு எடுத்து சென்ற னர். இது அப்பகுதி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com