கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு உறவினர்கள் மறியல்

கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்பாக்கம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு உறவினர்கள் மறியல்
Published on

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 30) ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் வடபட்டினம் கிராமத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் - மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூர் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அந்த ஆட்டோவில் ஆக்கிணாம்பட்டு கிராமம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தணிகைவேல் (33), ஏழுமலை (35), பிரகாஷ் (28), பிளஸ்- 2 மாணவி ராஜலட்சுமி (16) மற்றும் பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த திலக் சாம்ராஜ் (32) ஆகியோர் பயணம் செய்தனர். தட்டாம்பட்டு கிராமத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தை கடந்து சென்ற போது எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com