காஞ்சீபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லையா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கட்டிட ஒப்பந்தகாரர் தற்கொலை செய்து கொண்டார். அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லையா? போலீசார் விசாரணை
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர் குபேரன் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). கட்டிட ஒப்பந்தகாரர் . இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 10 ஆண்டுகளாக காஞ்சீபுரம் ஏனாத்தூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கட்டிட ஒப்பந்தகாரரான ராஜன் காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் பால் தொழிற்சாலை, ஐஸ்கிரீம் தொழிற்சாலை போன்றவற்றில் கட்டிட வேலைகளை ஒப்பந்த அடிப்படையில், செய்து வந்தார்.

நேற்று காலை கட்டிட தொழிலாளர்கள் ராஜன் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் கட்டிடத்திற்கு வந்தனர்.

அங்கு ராஜன் விஷம் குடித்து இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரது மனைவி, இளவரசி பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜனுக்கு இளவரசி என்ற மனைவியும், நிர்மல்ராஜ், தினேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

அவரது மகன்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், கடன் தொல்லையால் தனது தந்தை இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். ராஜன் கடன் தொல்லையால் இறந்தரா? என்பது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com