காவேரிப்பட்டணம் அருகே, 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

காவேரிப்பட்டணம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
காவேரிப்பட்டணம் அருகே, 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருடைய 9 வயது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4-3-2014 அன்று அந்த சிறுமியை காவேரிப்பட்டணம் அருகே ஜீகலன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (வயது 30) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார். அவர் மீது கடத்தல் மற்றும் சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு சிறுமியை கடத்தியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com