கயத்தாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கயத்தாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
Published on

கயத்தாறு,

கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முண்டசாமி என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 27).

இவர் சம்பவத்தன்று காலையில் 8 மணியளவில் தனது வீட்டிற்கு வடக்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் பம்பு செட் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதையடுத்து பாலமுருகனை உறவினர்கள் மீட்டு கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பாலமுருகனுக்கு அபிராமி (24) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரி கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com