கீரமங்கலம் அருகே பால் வேன் மோதி கொத்தனார் பலி தாய் மடியில் உயிரை விட்டார்

கீரமங்கலம் அருகே பால் வேன் மோதி கொத்தனார் பலியானார். ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் உயிருக்கு போராடிய அவர் தாய் மடியில் உயிரை விட்டார்.
கீரமங்கலம் அருகே பால் வேன் மோதி கொத்தனார் பலி தாய் மடியில் உயிரை விட்டார்
Published on

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா.

இவரது மகன் ராஜமான்(வயது 22). கொத்தனாரான இவர், நேற்று மதியம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலையில் ஈடுபட்டார். பின்னர், கடைவீதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நகரம் சன்னதி பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை கடக்க முயன்ற போது கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கிச் சென்ற பால் வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், ராஜமான் படுகாயமடைந்தார்.

அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், நீண்டநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் விபத்தை ஏற்படுத்திய பால் வேனிலேயே அவரை ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக காரில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ராஜமானின் தாயார் அவரை தனது மடியில் சாய்த்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தாய் மடியிலேயே ராஜமான் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பால் வேன் டிரைவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த மணிகண்டனை (22) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com