கோட்டயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் தந்தையுடன் பலி

கோட்டயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் தந்தையுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கோட்டயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி மாணவர் தந்தையுடன் பலி
Published on

பெரும்பாவூர்,

கோட்டயம் மாவட்டம் இலஞ்சி ஆலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் மாதவன் (வயது 50). தொழிலாளி. இவருடைய மனைவி நிம்மி. இவர்களுக்கு அஞ்சிதா என்ற மகளும், மிதுன் என்ற மகனும் இருந்தனர். இதில் மிதுன் அந்த பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜீவ் மாதவனுக்கு கையில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனது மகன் மிதுனுடன் மோட்டார் சைக்கிளில் மோனிப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து தந்தை, மகன் 2 பேரும் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மிதுன் ஓட்டினார். குருவிளங்காடு அருகே எம்.சி.ரோடு சந்திப்பு பகுதியில் வந்தபோது, கோட்டயம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் ராஜீவ் மாதவன், மிதுன் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த குருவிளங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து குருவிளங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com