மணலி அருகே கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

மணலி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மணலி அருகே கன்டெய்னர் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
Published on

திருவொற்றியூர்,

சென்னை கொடுங்கையூர் சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முகம்மது ஆலம்(வயது 32). உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர், மணலி புதுநகர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவரும், அதே பகுதியில் வேலை பார்த்து வந்த அவருடைய நண்பரான சத்தியபிரகாஷ் (44) என்பவரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஒரே மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர்.

மணலி அருகே உள்ள ஆண்டார்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் முகம்மது ஆலம், சத்தியபிரகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த சிவகுமார் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com