

வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேண்டாம்மாள் (வயது 58), இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் கடந்த 13-ந்தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.