படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஆதனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 80). இவர் தனது பேரன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆதனூர் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பச்சையப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் முதியவர் இரு தினங்களுக்கு முன் வீட்டை வீட்டு வெளியே சென்றுள்ளதாகவும் மனவிரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com