பள்ளிப்பட்டு அருகே லாரி மோதி தொழிலாளி பலி

பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பள்ளிப்பட்டு அருகே லாரி மோதி தொழிலாளி பலி
Published on

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அருகே சி.ஆர்.பட்டடை என்ற குதிரை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 53). கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை தனது கிராமத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் குமாரராஜுப்பேட்டை கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

அங்குள்ள குசஸ்தலை ஆற்று பாலத்தில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. சிலஅடி தூரத்துக்கு மோட்டார்சைக்கிளை லாரி இழுத்துச்சென்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com