

பொன்னேரி,
சோழவரத்தை அடுத்த ஒரக்காடில் ஷூ தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பழவேற்காடு, பொன்னேரி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் தினந்தோறும் வேனில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை 15 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது.
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனம் அருகே காஞ்சிவாயிலில் ஒருவளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.