பொன்னேரி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

பொன்னேரி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
பொன்னேரி அருகே குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
Published on

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய இலுப்பாக்கம் காலனியில் வசித்தவர் விநாயகம் (வயது 31). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கனகா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்றபோது, கால் தவறி நீரில் விழுந்த அவர், சேற்றில் சிக்கிக் கொண்டார்.

தகவல் அறிந்த பொதுமக்கள் விரைந்து வந்து குளத்தில் விழுந்த விநாயகத்தை தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், பொன்னேரி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து நீரில் மூழ்கி இறந்து கிடந்த விநாயகத்தின் உடலை மீட்டனர். தகவலறிந்த திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com