ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

ராதாபுரம் அருகே இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ராதாபுரம் அருகே, இளம்பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
Published on

ராதாபுரம்,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கால்கரை யாதவர் தெருவை சேர்ந்தவர் மந்திரம் (வயது 25). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (21). மந்திரத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து, முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்றும் மந்திரம், முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட முத்துலட்சுமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மந்திரத்திற்கும், முத்துலட்சுமிக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆவதால், இச்சம்பவம் தொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com