ரிஷிவந்தியம் அருகே: பிரசவத்தில் பெண் சாவு - குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பரிதாபம்

ரிஷிவந்தியம் அருகே பிரசவத்தின்போது குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் திடீரென இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரிஷிவந்தியம் அருகே: பிரசவத்தில் பெண் சாவு - குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பரிதாபம்
Published on

ரிஷிவந்தியம்,

விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆற்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகள் மஞ்சுளா(வயது 23). இவருக்கும் பகண்டை கூட்ரோடு அருகே உள்ள சின்னக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மஞ்சுளா, சின்னக்கொள்ளியூர் கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மஞ்சுளா கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக சீர்பனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினர்கள் சேர்த்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மஞ்சுளாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அனால் மஞ்சுளாவின் உடலில் இருந்து நஞ்சுக்கொடி வெளியே வரவில்லை என தெரிகிறது. இதனால் அவருடைய உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி பழனி பகண்டைகூட்ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com