சேந்தமங்கலம் அருகே நின்ற அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஏட்டு பலி டிரைவர் மீது வழக்குப்பதிவு

சேந்தமங்கலம் அருகே நின்ற அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு பலியானார். பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேந்தமங்கலம் அருகே நின்ற அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஏட்டு பலி டிரைவர் மீது வழக்குப்பதிவு
Published on

சேந்தமங்கலம்,

திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகலாதன் (வயது 53). இவர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தீபாவளி நாளன்று இவர் சேந்தமங்கலத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் சென்றபோது பட்டத்தையன்குட்டை பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ் பின்புறம் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பிரகலாதன் உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் போலீசார் அரசு பஸ் டிரைவரான சிங்களாந்தபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (37) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்ததாக தெரிகிறது. இதையறிந்த அரசு பஸ் டிரைவர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்டக்டர் சுப்பிரமணி (48) மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று காலை சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பு டிரைவர் மீது வழக்கு போடாதே என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். வெளியில் வந்த போலீசார் போக்குவரத்து சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் பலியான போலீஸ் ஏட்டு பிரகலாதனுக்கு விஜயலட்சுமி (43) என்ற மனைவியும், பரத் (21), முகில் (18) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com