சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது
Published on

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜோதி (வயது 40). இவரது மனைவி ரேவதி (36). இந்த நிலையில் ரேவதியின் நடத்தை மீது சந்தேகமடைந்த அவரது தந்தையான கொழை கிராமத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் உறவினர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அவரை அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து தூண்டுதலின் பேரில் கொலை செய்யப்பட்டதாக கூறி 15-க்கும் மேற்பட்டோர் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேட்டு தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் பிரசாந்த் (28), வீரமுடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் செல்வவிநாயகம் (24), அதே ஊரைச் சேர்ந்த வீர அரசு மகன் வீரபாண்டியன் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com