ஸ்ரீமுஷ்ணம் அருகே, வெள்ளாற்றில் மணல் கடத்திய 18 பேர் சிக்கினர்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மணல் கடத்திய 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே, வெள்ளாற்றில் மணல் கடத்திய 18 பேர் சிக்கினர்
Published on

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி வெள்ளாற்றில் இருந்து மாட்டுவண்டிகள் மற்றும் லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஸ்ரீமுஷ்ணம் வெள்ளாற்று பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கீழ்புளியங்குடி தரைப்பாலம் மற்றும் வெள்ளாற்றங்கரையோரம் வந்த 18 மாட்டு வண்டிகளை போலீசார் வழிமறித்து அதனை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கள்ளிப்பாடியை சேர்ந்த தண்டபாணி (வயது 38), பாலு(40), அண்ணாதுரை(55), ராதாகிருஷ்ணன்(50), மணி(58), தனசங்கு(53), ராஜேந்திரன்(52), சத்யராஜ்(25), கணேசன்(58), சையத் லத்திபான்(50), அப்துல் சாதிக்(56), ஆனந்த்(27), அன்பழகன்(59), தெய்வசிகாமணி(41), வேல்முருகன்(52), கோபாலகிருஷ்ணன்(32), அல்லிமுத்து(37), காமராஜ்(45) என்பதும், வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தண்டபாணி, பாலு உள்ளிட்ட 18 பேரையும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 18 மாட்டு வண்டிகளையும் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து பாலு உள்ளிட்ட 18 பேரை கைது செய்தார். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 18 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com