ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான இரும்பு கடையில் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் முத்துவின் இரும்பு கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சுமார் 300 கிலோ எடை உள்ள 6 செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். மேலும், செம்மர கட்டைகளை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், இந்த செம்மரக்கட்டைகள் வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் இருந்து கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதற்டையே செம்மரக்கட்டையை கடத்த பயன்படுத்திய லோடு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com