இரணியல் அருகே: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- எலக்ட்ரீசியன் பலி

இரணியல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இரணியல் அருகே: மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்- எலக்ட்ரீசியன் பலி
Published on

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே உள்ள பேயன்குழியை சேர்ந்த ராமன் மகன் சாலி ஈஸ்வரன் (வயது28), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு திங்கள்சந்தையில் இருந்து பேயன்குழிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இரணியல் அருகே காட்டேற்றி பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென அது சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது.

இதில் சாலிஈஸ்வரன் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் இரணியல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று சாலிஈஸ்வரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த விபத்து தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com