கம்பம் அருகே: வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டியானை

கம்பம் அருகே வனப்பகுதியில் குட்டியானை இறந்து கிடந்தது.
கம்பம் அருகே: வனப்பகுதியில் இறந்து கிடந்த குட்டியானை
Published on

கம்பம்,

கம்பம் வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், விவசாய தோட்டங்களுக் குள்ளும் புகுந்து வருகிறது. குறிப்பாக காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவ்வாறு வரும் வனவிலங்குகள் சில நேரங் களில் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

இந்தநிலையில் கம்பம் கிழக்கு வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் கைலாயநாதர் குகை பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் குட்டியானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் வனச்சரகர் தினேஷ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ஆனால் இரவு நேரம் ஆனதால் குட்டியானையின் உடலை பரிசோதனை செய்ய முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை நாராயணத்தேவன்பட்டி கால்நடை டாக்டர் செல்வம் தலைமையில் குட்டியானையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இடத்திலேயே குட்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்த குட்டியானைக்கு சுமார் 5 வயது இருக்கும். அவை தாய் யானையுடன் உணவு தேடி வந்தபோது, பாறையில் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம். இருப்பினும் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குட்டியானை இறந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com