படப்பை அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது

படப்பை அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை அருகே சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த 2 பேர் கைது
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூர் பைபாஸ் அருகே உள்ள சோமங்கலம்- தாம்பரம் சாலையில் சோமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசங்கர் நேற்று முன்தினம் மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் 2 பேர் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டு அந்த வழியாக வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது வரதராஜபுரம் ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 36) மற்றும் அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (39) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com