சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் 2 பேர் கைது செய்தனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அனுமந்தபுரம் கூட்டு ரோட்டில் புகையிலைப் பொருட்களை மூட்டைகளில் சிலர் பதுக்கி வைத்திருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு 6 பிளாஸ்டிக் கோணி பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (வயது 40), சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (35), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 1,200 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com