திண்டிவனம் அருகே: தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை சாவு

திண்டிவனம் அருகே தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.
திண்டிவனம் அருகே: தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை சாவு
Published on

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த கடவாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி(வயது 32). இவரது மனைவி வைதேகி. இவர்களுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று வைதேகி தனது குழந்தையை வீட்டில் உள்ள தொட்டிலில் போட்டிருந்தார். அப்போது அந்த குழந்தை தொட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த குழந்தை வீரிட்டு அழு தது. இதை பார்த்து பதறிய பெற்றோர் அந்த குழந்தையை உடனடியாக சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அந்த குழந்தையை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com