திருவள்ளூர் அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.9 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் கைது

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூ.9 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தந்தை மகன் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.9 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கும்மிடிப்பூண்டி கொல்கத்தா மெயின் ரோடு எல்.பி.காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 48). இவர் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு உதவியாக அவரது மகன் பிரதீப் (21) என்பவர் இருந்து வந்தார். அவர்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் 2 கிராம் தங்க காசு மற்றும் 40 வாரங்கள் கழித்து ரூ.20 ஆயிரமாக திருப்பித் தருவதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் சேர்ந்து பணம் செலுத்தி உள்ளனர்.

ஆனால் பணத்தை தராமல் தந்தை- மகன் இருவரும் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அதன் பின்னர், ரூ.9 லட்சம் மோசடி செய்து இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தலைமறைவாக இருந்த கோதண்டபாணி அவரது மகன் பிரதீப் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com