உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? சப்-கலெக்டர் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? சப்-கலெக்டர் விசாரணை
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவர் செம்பியன்மாதேவியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சண்முக தீபிகா(21) என்பவரும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

சம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சண்முக தீபிகா தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சண்முக தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முக தீபிகா உடல்நலக்கோளாறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சண்முக தீபிகாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால் அவரது தற்கொலை குறித்து, சப்-கலெக்டர் சாருஸ்ரீயும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com