உளுந்தூர்பேட்டை அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பெண், தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மனைவி ஷிலா (வயது 28). இவர்களுக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தை உள்ளனர். கடந்த சில நாட்களாக ஷிலா மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடம்பில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷிலா பரிதாபமாக இறந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷிலா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com