உத்திரமேரூர் அருகே கோர்ட்டு உதவியாளர் தற்கொலை

உத்திரமேரூர் அருகே கோர்ட்டு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர் அருகே கோர்ட்டு உதவியாளர் தற்கொலை
Published on

உத்திரமேரூர்,

உத்திரமேரூரை அடுத்த மருதம் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 55). காஞ்சீபுரம் சப்-கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகவில்லை. காஞ்சீபுரத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் மருதம் கிராமத்தில் இருந்து மலையாங்குளம் செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில் போலீசார் விரைந்து சென்று அண்ணாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com