வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்

வாணியம்பாடி அருகே திருமணமான 17 நாளில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்
Published on

வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (வயது 25). என்ஜினீயரான இவருக்கும் வாணியம்பாடியை சேர்ந்த நவீன்குமாருக்கும் கடந்த 6-ந் தேதி திருமணம் நடந்தது. நவீன்குமார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கணவர் வீட்டில் சில நாட்கள் வசித்த தீபிகா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்குப்போட்டுக்கொண்டார். அப்போது வெளியில் சென்ற குடும்பத்தினர் வீடு திரும்பியபோது தீபிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். அக்கம்பக்கத்தினரும் அங்கு வரவே அவர்கள் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டு அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 17 நாட்களிலேயே தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வேலூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணைக்கு பின்னரே தீபிகா தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com