வேதாரண்யம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

வேதாரண்யம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்துக் கொண்டார்.
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே உள்ள வடமலை மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது45). கொத்தனார். இவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி இறந்து விட்டார். மனைவி இறந்த சோகத்தில், நான் இருந்து என்ன செய்யப் போகிறேன் என அடிக்கடி வருத்தத்துடன் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதன் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com