விக்கிரமசிங்கபுரம் அருகே அரசு ஊழியர் தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்

விக்கிரமசிங்கபுரம் அருகே அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அரசு ஊழியர் தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்
Published on

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் புலவன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 45). கடையம் தொடக்க கல்வி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புலவன்பட்டியில் முருகன் கோவில் முன்பு உள்ள களத்துபாறையில் ராஜன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கடன் கொடுத்தவர்கள் நெருக்கியதால் ராஜன் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இறந்த ராஜனுக்கு டெய்சி (37) என்ற மனைவியும், அபிஷேக் (14), ஜீவா (12) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கடன் தொல்லையால் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com