விக்கிரமசிங்கபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை மனைவி, குழந்தைகளை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர்

விக்கிரமசிங்கபுரம் அருகே மனைவி, குழந்தைகளை கொன்ற வழக்கில் தண்டனை அனுபவித்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரமசிங்கபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை மனைவி, குழந்தைகளை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர்
Published on

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்தவர் நாராயணன். கூலி தொழிலாளி. இவருக்கு இசக்கியம்மாள் (வயது 32) என்ற மனைவியும், முத்துராமலிங்கம் (5) என்ற மகனும், அனு (3) என்ற மகளும் இருந்தனர். நாராயணன் கடந்த 2007-ம் ஆண்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துக் கொலை செய்தார். அப்போது தூங்கிக்கொண்டு இருந்த 2 குழந்தைகளையும் தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்தார்.

இதுதொடர்பான வழக்கில் நாராயணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தண்டனையை அனுபவித்து, கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது தாய் ஆவுடையம்மாளுடன் ஊரில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நாராயணன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாராயணன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com