விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல் - தொழிலாளி பலி

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதல் - தொழிலாளி பலி
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகன் அருண் மேத்தா (வயது 33), தொழிலாளி. இவர் மீது விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருண் மேத்தா தனது மோட்டார் சைக்கிளில் குப்பநத்தத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சென்ற போது, எதிரே வந்த மினி லாரி ஒன்று, அருண் மேத்தா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண் மேத்தா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண் மேத்தா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அருண் மேத்தாவின் மனைவி அமுதா விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com