கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்கள் கிடைக்க நடவடிக்கை தேவை - கேரள முதல்வருக்கு எம்.பி. கடிதம்

கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்கள் கிடைக்க நடவடிக்கை தேவை - கேரள முதல்வருக்கு எம்.பி. கடிதம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறு தீப்பெட்டி தொழிற் கூடங்கள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி தொழில் முடங்கிய நிலையில் இத்தொழில் மூலம் வாழ்வாதாரம் பெற்று வந்த ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதனிடையே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தீப்பெட்டி தொழில் நிறுவனங்கள் செயல்பட கடந்த 4-ந்தேதி முதல் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான தீக்குச்சிகள் கேரளாவில் இருந்து வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், தீப்பெட்டி உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் அதன் மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ள தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. எனவே கேரளாவில் இருந்து தீக்குச்சி பண்டல்களை அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கேரள முதல்-அமைச்சரின் தனி செயலாளரிடமும் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com