காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை

வடமதுரை அருகே காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த நர்சு தற்கொலை
Published on

வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முனுசாமி (வயது 32). எலக்ட்ரீசியன். இவரும், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மகாலட்சுமி (வயது 29) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. முனுசாமி தனது மனைவி, குழந்தையுடன் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்தார். நர்சாக பணியாற்றி வந்த மகாலட்சுமி, திருமணத்திற்கு பிறகு அந்த பணிக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மகாலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முனுசாமி மற்றும் அவரது உறவினர்கள், இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே மகாலட்சுமியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com