பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது
Published on

விழுப்புரம்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகள் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்று, கல்வி செயல்பாடுகள் உள்ளிட்ட பிற தனித்திறன்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான காமராஜர் விருது வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிளஸ்-2 மாணவ- மாணவிகள் 15 பேருக்கு காமராஜர் விருதான தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் 15 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் நீலாம்பாள், கிருஷ்ணப்பிரியா, சசிகலா, கிருஷ்ணன், ஆனந்தன், ரத்தினசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com