மாகிம் கடற்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் மீட்பு யார் அவர்? போலீஸ் விசாரணை

மாகிம் கடற்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் மீட்கப்பட்டது. அவர் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாகிம் கடற்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் மீட்பு யார் அவர்? போலீஸ் விசாரணை
Published on

மும்பை,

மும்பை மாகிம் கடற்கரையில் நேற்று முன்தினம் மதியம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடற்கரைக்கு வந்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்கவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com